மேட்டுப்பாளையத்தை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் புதிய ரெட் ரிப்பன் அமைப்பின் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிர்வாக அலுவலர் ரூபன் சுகுமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயஸ்ரீ ராணி வரவேற்றார். விழாவில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மைய ஆலோசகர் கல்பனா சிறப்பாளராக பங்கேற்று புதிய ரெட் ரிப்பன் அமைப்பை துவக்கி வைத்தார்.
இதில், கல்வியியல் பட்டப்படிப்பு படிக்கும் முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். கல்வியியல் துணை பேராசிரியர் செல்வகுமாரி நன்றி கூறினார்.