ஈரோட்டில் திமுக சார்பில் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெறும் திமுக மண்டல மாநாடு குறித்து அன்னூர் ஒன்றியத்தில், 5 ஊராட்சிகள், பேரூராட்சியில் தெருமுனைப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
அன்னூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி, கெம்பநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்துக்கு ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்னூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கலை, இலக்கியப் பேரவையின் மாநிலச் செயலாளர் உமாபதி பங்கேற்றுப் பேசினார்.
தொடர்ந்து, கரியாம்பாளையம், அன்னூர் நகர திமுக சார்பில் பயணியர் மாளிகை முன்பு தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
தொடர்ந்து, மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சியில் புதன்கிழமை தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக அன்னூர் நகரப் பொறுப்பாளர் ரஹமத்துல்லா, ஊராட்சி செயலாளர் தனபால் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.