கோயம்புத்தூர்
தர்மலிங்கேசுவரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
மதுக்கரை, மரப்பாலத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
மதுக்கரை, மரப்பாலத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நந்தி பகவானுக்கு மஞ்சள், திரவியபொடி, பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், சந்தனம் முதலான 21வகை திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.