மானாவாரி நில மேம்பாடு குறித்த விவசாயிகள் கூட்டம்

எஸ்.எஸ்.குளம் வட்டார வேளாண் அலுவலகத்தில் நீடித்த மானாவாரி விவசாய இயக்க திட்டத்தின் கீழ் மானாவாரி நில மேம்பாடு குறித்த விவசாயிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எஸ்.எஸ்.குளம் வட்டார வேளாண் அலுவலகத்தில் நீடித்த மானாவாரி விவசாய இயக்க திட்டத்தின் கீழ் மானாவாரி நில மேம்பாடு குறித்த விவசாயிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வேளாண் உதவி இயக்குநர் நிர்மலா தலைமை வகித்தார். இதில், எஸ்.எஸ்.குளம்,  இடிகரை,  கள்ளிப்பாளையம்,  வெள்ளாணைபட்டி,  கீரணத்தம்,  காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2,500 ஏக்கர் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை விவரங்கள் சேகரிக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர் மாணிக்கவாசகம், பொறியாளர் ராஜேந்திரன், கால்நடை மருத்துவர் ராஜாங்கம்,  துணை வேளாண் அலுவலர் பார்த்திபன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com