கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வராக டி.பிருந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே கல்லூரியில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவர், உயிரி வேதியியல் துறைத் தலைவராக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். ஏராளமான எம்.ஃபில்., ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ள இவர், உயிரி வேதியியல் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை சமர்ப்பித்திருப்பதாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.