புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 80 கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் எஸ்.ஹரிஹரன், வணிகவியல், கணினி பயன்பாட்டியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி டி.ஸ்வேதா ஆகியோர் உள்பட 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட இருவரும் பெங்களூரில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான தகுசிச் சுற்றில் பங்கேற்க உள்ளனர். தேர்வான இருவரையும் எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்கள், கல்லூரி முதல்வர் கு.கருணாகரன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.