சி.பி.எஸ்.இ. சென்னை மண்டலப் பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டியில் கோவை, நல்லாம்பாளையம் அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னை மண்டலத்துக்குள்பட்ட தமிழ்நாடு, புதுவை, அந்தமான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டிகள் கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றன. இதில், 17 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் அமிர்த வித்யாலயம் பள்ளி தொடர்ந்து 3-ஆவது முறையாக வெற்றி பெற்றது.
மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த அணி, ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில், 17 வயதுக்குள்பட்ட மாணவியர் பிரிவில் இப்பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்துள்ளது.
வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்றிருந்த மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் நிருபமாமிர்த சைதன்யா, பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.