சீட்டு கம்பெனி நடத்தி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்

பொள்ளாச்சியில் இயங்கிவரும் தனியார் சீட்டு கம்பெனி பல லட்சம் மோசடி செய்துவிட்டதாக பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் இயங்கிவரும் தனியார் சீட்டு கம்பெனி பல லட்சம் மோசடி செய்துவிட்டதாக பொள்ளாச்சி டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தனர்.
 பொள்ளாச்சி நியூஸ்கீம் சாலையில் செயல்பட்டுவரும் தனியார் சீட்டு கம்பெனியில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் பணம் கட்டியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், தற்போது, பணம் கட்டியவர்களுக்கு பணம் தராமல் சீட்டு கம்பெனி நிர்வாகம் இழுத்தடிப்பதாகவும், தங்கள் பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும் கூறி 25க்கும் அதிகமானோர் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர். பொதுமக்கள் புகாரையடுத்து, நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com