கருமத்தம்பட்டியை அடுத்த கோதைபாளையத்தில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
கருமத்தம்பட்டியை அடுத்து கோதைபாளையத்தில் பனியன் எலாஸ்டிக் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இதை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ்குமார் பஜாஜ் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்தத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் எலாஸ்டிக் பனியன் பொருள்கள் எரிந்து நாசமாயின. இதைத் தொடர்ந்து திருப்பூரில் இருந்து தீயணைப்புப் படையினர் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. மின்சாரக் கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.