மதுக்கரை அருகே பைக் திருட்டு

மதுக்கரையை அடுத்த ஒத்தக்கால்மண்டபத்தில் பைக் திருடு போனது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுக்கரையை அடுத்த ஒத்தக்கால்மண்டபத்தில் பைக் திருடு போனது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபின் (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.  அந்த மருத்துவமனைக்கு முன்பு ஜெபின் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செவ்வாய்க்கிழமை பணிக்கு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.  இதுகுறித்து  செட்டிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com