திருப்பூர் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் கார்த்திகேயன் (20). இவர் கணியூரில் உள்ள தனியார் தொழிற்கூடத்தில் பணி பயிற்சி பெற்றுவந்தார். இவர் வியாழக்கிழமை இரவு பயிற்சி முடிந்து தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
கணியூர் சுங்கச் சாவடி அருகே சாலையை கடக்கும் போது கோவையில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் வெள்ளிக்கிழமை இறந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநரான சேலத்தைத் சேர்ந்த அழகரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.