பவானியை அடுத்த அம்மாபேட்டையில் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவோருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் அம்மாபேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், 400 குடும்பத்தினருக்கு முதல்கட்டமாக மின்னணு அட்டைகளை வழங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் டி.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக (அம்மா அணி) செயலர் வி.எஸ்.சரவணபவா, பேரூராட்சித் துணைத் தலைவர் யு.எஸ்.சுந்தரராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.