ஈரோடு புத்தகத் திருவிழாவில் 9-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்கில் "தமிழர் வாழ்வில் சினிமா' எனும் தலைப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ.பாலசந்தரும், "வாசிக்க வந்த இடம்' எனும் தலைப்பில் ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலர் ஆர்.பாலகிருஷ்ணனும் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு, வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகிக்கிறார். எஸ் அன்ட் எஸ் கட்டுமான நிர்வாக இயக்குநர் டி.சண்முகன், சிகரம் கட்டுமான நிர்வாக இயக்குநர் ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.