முப்பாலின் முன்னுரை பாயிரம் ஆய்வுக் கட்டுரை நூல் வெளியீடு

ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி, "முப்பாலின் முன்னுரை பாயிரம்' எனும் ஆய்வுக் கட்டுரை நூல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி, "முப்பாலின் முன்னுரை பாயிரம்' எனும் ஆய்வுக் கட்டுரை நூல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
 ஈரோடு விதை பதிப்பகம் சார்பில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு - சத்தி சாலையில் உள்ள வி.பி.வி. அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளைத் தலைவர் யு.வேணுகோபால் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் நிர்வாகி தே.ஹெலினா வரவேற்றார். மற்றொரு நிர்வாகி சி.சண்முகம் தொடக்க உரையாற்றினார். கரூர் ஆர்த்தி கண் மருத்துவமனை
மருத்துவர் ப.ரமேஷ் இந்நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.  
ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் ஈ.கே.சகாதேவன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்நூலில் மொத்தம் 15 ஆய்வாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 171 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ.200.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com