ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி, 'கொக்குகளுக்காகவே வானம்' எனும் குழந்தைகளுக்கான காகித மடிப்புக் கலை புத்தகம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் ஓரிகாமி சேகர் எழுதிய இந்நூலை இயல்வாகை பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா புத்தகத் திருவிழா மைதானத்தில் உள்ள இயல்வாகை அரங்கில் (அரங்கு எண்-154) நடைபெற்றது.
எழுத்தாளர் புதின் இந்நூலை வெளியிட புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்த சிறுமி அதைப் பெற்றுக் கொண்டார். காகித மடிப்புக் கலை தொடர்பான செயல்விளக்கம் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி குமார், இயல்வாகை பதிப்பாளர் அழகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். 40 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ. 65.