அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்பினர் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எஸ்.ஸி. துறை சார்பில் மாவட்டத் தலைவர் கே.பி. சின்னச்சாமி தலைமையில், துணைத் தலைவர் எம். ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் இ.பி. ரவி, அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில், மாவட்ட நிர்வாகிகள் டி. கண்ணப்பன், பி.ஏ. பெரியசாமி, எல். சாமுவேல், ஆர். விஜயபாஸ்கர், கே.என். பாஷா, சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மணல்மேடு வீதியில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ஆரீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் எ. ராஜன், நிர்வாகிகள் தளபதி ரமேஷ், அப்பாஸ், மேகநாதன், கனகு உள்ளிட்டோர் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
மரப்பாலம் பகுதியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் மண்டல அமைப்புச்செயலர் நா. விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நிர்வாகிகள் ஜாபர்அலி, அம்ஜக்கான், பைஜில்அகமது, ஓயிட்சாதிக், பூர்ணிமா, தமிழ்மணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பாமக மாநில துணைப்பொதுச்செயலர் பொ.வை. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நிர்வாகிகள் எஸ்.எல். பரமசிவம், அலெக்ஸ் உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சத்தியமங்கலத்தில்...
சத்தியமங்கலத்தில் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தமிழக தலித் விடுதலைக் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்துக்கு மாநில துணை பொதுச்செயலர் அப்துல்லா, மாவட்டச் செயலர் பி.பொன்னுச்சாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். இதில், அக் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பவானிசாகர் பொறுப்பாளர் தம்பிராஜா தலைமையில் அக் கட்சியினர் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.