ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள பாப்பாங்காட்டூரில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் உழவர் விவாதக் குழு சார்பாக உலக மண்வள தின விழா விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பா.அ.சென்னியப்பன் தலைமை வகித்தார்.
பால் கூட்டுறவு சங்கத் தலைவர் மா.சுப்ரமணியம், உழவர் குழுத் தலைவர் ஆர்.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக மாணவி பூர்வசந்தியா வரவேற்றுப் பேசினார்.
மண்வளம் பற்றிய விழிப்புணர்வுத் தொகுப்பை உழவர் விவாதக் குழு அமைப்பாளர் பா.மா.வெங்கடாசலபதி வெளியிட்டார். முன்னோடி உழவர்கள் பி.ஈஸ்வரமூர்த்தி, செங்கோட்டையன் பெற்றுக் கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவிகள் கிருத்திகா, பிரகதி, சாருமதி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில், துணை வேளாண்மை அலுவலர் பழனிசாமி, உதவி வேளாண்மை அலுவலர் பி.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.