மொடக்குறிச்சியை அடுத்துள்ள எழுமாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஈரோடு பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா பள்ளியில் நடைபெற்றது.
விழாவை ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி தாளாளர் இளங்கோ தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு வரைபடப் புத்தகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வரலாறு, அறிவியல், பொது அறிவு என பல்வேறு தலைப்புகளில் உள்ள நூல்கள் இடம் பெற்றிருந்தன.
பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர் பால்ராஜ் செய்திருந்தார்.