அனுமதியின்றி மண் எடுத்த பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

பெருந்துறை அருகே அனுமதியின்றி மண் எடுத்த பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

பெருந்துறை அருகே அனுமதியின்றி மண் எடுத்த பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. 
பெருந்துறையை அடுத்த சுள்ளிப்பாளையம் பகுதியில் ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். நர்மதாதேவி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தனியார் நிலத்தில் மண் எடுத்துக் கொண்டிருந்த பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுநரான மதுரையைச் சேர்ந்த கார்த்திகேயனை  விசாரித்தார்.  
விசாரணையில், சென்னிமலை, உலகபுரம் பகுதியைச் சேர்ந்த வேலுசாமிக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம் என்றும், அனுமதியின்றி மண் எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு, பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com