தொட்டம்பாளையம் பகுதியில் குடிநீர் கோரி பொதுமக்கள் காலிக் குடங்ளுடன் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
பவானிசாகர் ஒன்றியம், தொப்பம்பாளையம் ஊராட்சியில் உள்ள தொட்டம்பாளையம் பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர் பவானிசாகரில் செயல்படும் தொட்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு தேவாங்கபுரம், ராஜீவ்நகர், அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை என புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 7 நாள்களாக அண்ணா நகர், காலனி ஆகிய பகுதிகளுக்கு போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அண்ணா
நகர் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சத்தி - பவானிசாகர் பைபாஸ் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸாரும், உள்ளூர் அதிமுக பிரமுகர்களும் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, குடிநீர் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இரண்டொரு நாள்களில் குடிநீர் விநியோகம் சீராகும் எனவும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியலை பொதுமக்க் கைவிட்டனர்.