ஈரோடு மின் பகிர்மான வட்ட பயனீட்டாளர்களுக்கான மாதாந்திர பராமரிப்புக் கூட்டம் பெருந்துறையில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இக்கூட்டம், பெருந்துறை, ஈரோடு சாலை, வெங்கமேட்டில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.
கூட்டத்தில், மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திரன் பங்கேற்கிறார். மின் பயனீட்டாளர்கள் தங்களது குறைகளை எழுத்துப் பூர்வமாக வழங்கலாம்.