லாரி மோதி இரு இளைஞர்கள் சாவு

மொடக்குறிச்சியை அடுத்த வேப்பமரத்துக்களம் பகுதியில் லாரியும், இருசக்கர வாகனமும் மோதியதில் இளைஞர்கள் உயிரிழந்தனர்.

மொடக்குறிச்சியை அடுத்த வேப்பமரத்துக்களம் பகுதியில் லாரியும், இருசக்கர வாகனமும் மோதியதில் இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் ரவிகுமார் (27),  ஆறுமுகம் மகன் பிரபு (30). இருவரும் கட்டடத் தொழிலாளர்கள்.
இவர்கள் இருவரும் சோலாரிலிருந்து கணபதிபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தனர். வேப்பமரத்துக்களம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே கரூரிலிருந்து மணல் பாரம் ஏற்றி வந்த லாரியும், இருசக்கர வாகனமும் மோதியதில் ரவிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரபு உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீஸார் விசாரரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com