மின் வாரியப் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர்கள் சங்கம் சார்பில், கோபிசெட்டிபாளையம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு  நுழைவாயில் கூட்டம், ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர்கள் சங்கம் சார்பில், கோபிசெட்டிபாளையம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு  நுழைவாயில் கூட்டம், ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர்கள் சங்கம் சார்பில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலைப் பளுவைக் குறைக்க வேண்டும். தளவாடப் பொருள்கள் தடையில்லாமல் கிடைக்க வேண்டும்.
 அனைத்துப் பிரிவுகளுக்கும் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பதவிகள் உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு அரசுத் துறைக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர் சிவில் பதவிகளை உருவாக்க வேண்டும் என தமிழக அரசையும், மின்சார வாரியத்தையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இதில், கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் ஆகிய தாலுகாக்களில் பணிபுரியும் மின்வாரியப் பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com