மத்திய அரசைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஈரோட்டில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாக்கிய கபிலன் (எ) சேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளரான தேசிய பொருளாளர் அம்பேத்ராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் கோபிநாதன், மாநிலப் பொதுச் செயலர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் விரோதப் போக்குடன் பல்வேறு செயல்திட்டங்களை அரங்கேற்றி வரும் பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஒருங்கிணைப்பாளர்கள் செல்வன், வினோத்குமார், பார்த்திபன், ரகு, மாவட்ட துணைத் தலைவர் வீரப்பன், மாவட்ட பொதுச் செயலர் சென்னியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.