பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து சிறப்பு வழிபாடுகளுடன்108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. நகரின் பிரதான வீதிகளில் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் செல்லியாண்டி அம்மன் கோயிலில் முடிவடைந்தது. இதையடுத்து, அம்மனுக்கு பாலாபிஷேக வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரசாதமும், அன்னதானமும்
வழங்கப்பட்டது.
இதையடுத்து, மதுரை மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆடிப்பூர வழிபாட்டுக் குழுத் தலைவர் பூபதி ராஜமன்னன் தலைமையில் உபயதாரர்கள் செய்திருந்தனர்.