கோபிசெட்டிபாளையம் அருகே காசிபாளையம், கரட்டுப்பாளையம், அளுக்குளி, நல்லகவுண்டம்பாளையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து வீடு, கடைகளில் இருந்த பொதுமக்கள் வெளியில் ஓடி வந்தனர். மூன்று முதல் ஐந்து விநாடிகள் வரை நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வால் கட்டடங்களுக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர், காவல் துறையினர் அதிர்வு ஏற்பட்ட கிராமங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட ராமர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஒரு வீட்டின் சுவற்றில் விரிசல் இருப்பது தெரியவந்தது.