ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்ற சிறப்புக் கூடுதல் வழக்குரைஞராக துரை சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழக அரசு வழக்குரைஞராக இவர் பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே இவர் 10 ஆண்டுகளாக கூடுதல் அரசு வழக்குரைஞராக ஈரோடு நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளார். ஈரோடு நீதிமன்றத்தில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் அணியில் மாவட்டச் செயலர் பொறுப்பில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.