பவானி ஆற்றில் மூழ்கி இருவர் சாவு

அஸ்தி கரைப்பதற்குச் சென்றவர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இவரைக் காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அஸ்தி கரைப்பதற்குச் சென்றவர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இவரைக் காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோபி, புதுக்காடு, கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் மோகன். இவரது பாட்டி கண்ணம்மாள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது அஸ்தியைக் கரைக்க, உறவினர்களுடன் மோகன் கள்ளிப்பட்டி அருகே உள்ள பவானி ஆற்றுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.
பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே சென்று கொண்டிருப்பதால் ஆற்றின் மையப் பகுதிக்குச் சென்று அஸ்தியைக் கரைக்க மோகன் முற்பட்டபோது திடீரென ஆற்றின் நீரில் மூழ்கியபடி சப்தம் எழுப்பியுள்ளார். மோகனின் சப்தம் கேட்டு அருகில் துணி துவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளி சுப்பிரமணியம் ஆற்றின் மையப் பகுதிக்குச் சென்று மோகனைப் பிடித்து இழுத்துள்ளார். அதற்குள் மோகன் ஆற்று நீரில் மூழ்கிள்ளார். அவரைத் தொடர்ந்து சலவைத் தொழிலாளியும் நீரில் மூழ்கியுள்ளார்.
இதைப் பார்த்த மோகனின் உறவினர்கள், கோபி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், பங்களாபுதூர் காவல் துறையினர் நீரில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத் தேடலுக்குப் பின்னர் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன.
இதுகுறித்து, பங்களாபுதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com