போராட்டம் ஒத்திவைப்பு

கேரள அரசைக் கண்டித்து நடைபெற இருந்த விவசாயிகள் போராட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரள அரசைக் கண்டித்து நடைபெற இருந்த விவசாயிகள் போராட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசைக் கண்டித்து பவானி தடுப்பணை தடுப்புக்குழு சார்பில் ஈரோடு மாவட்டத்தில் 13 இடங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் 2 இடங்களிலும் என மொத்தம்
15 இடங்களில் மார்ச் 30-ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கவும், ஏப்ரல் 7-ஆம் தேதி மனிதசங்கிலிப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், உண்ணாவிரதம், மனிதசங்கிலி போராட்டத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக கீழ்பவானி முறைநீர்ப் பாசன கூட்டமைப்புச் செயலர் வடிவேல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com