பவானி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மின்வாரியப் பொறியாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஈரோடு திண்டல் டி.ஆர்.கார்டனை சேர்ந்தவர் நடேசன் மகன் கந்தசாமி (48). மின்வாரிய உதவிப் பொறியாளரான இவர், பவானியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஈரோடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, காலிங்கராயன் வாய்க்கால் அருகே அரசுப் பேருந்து மோதியது. இதில், கீழே விழுந்தவரின் தலைமீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.