பெருந்துறையில் ரூ. 2.10 கோடியில் தார் சாலை மேம்படுத்தும் பணி

பெருந்துறை ஒன்றியம், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ. 2.10 கோடி மதிப்பில் தார் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை ஒன்றியம், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ. 2.10 கோடி மதிப்பில் தார் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று, பெருந்துறை பேரூராட்சி, மஜீத் வீதியில், ரூ. 60 லட்சம் மதிப்பில் தார் சாலை மேம்படுத்தும் பணி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் பெருந்துறை - கவுந்தப்பாடி சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணிகளை பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.
 இதில், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, ஒன்றியச் செயலாளர் விஜயன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜானகி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com