மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்  அவல்பூந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்  அவல்பூந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கொழந்தசாமி வரவேற்றார். அறச்சலூர் கிளைத் தலைவர் சூர்யாவடிவேல், செயலாளர் இளங்கோ ஆகியேர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில், மண்பாண்டத் தொழில்களுக்கு ஏரி, குளங்களில் களிமண் எடுக்க அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 தொடர்ந்து, தலைவர் வெங்கடாசலம் பேசுகையில், அரசு அறிவித்துள்ளபடி ஏரி, குளங்களில் களிமண் எடுக்க அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி கோரிக்கை மனு அளித்து, அனுமதி பெற்று மண்பாண்ட தொழில்களுக்கு களிமண்ணைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
 அறச்சலூர் கிளை பொருளாளர் கனகராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com