10-ஆம் வகுப்புத் தேர்ச்சி: மூன்று ஆண்டு தொடர் சாதனையை இழந்தது ஈரோடு: முதலிடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு சரிந்தது

10-ஆம் வகுப்புத் தேர்வில் மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம், இந்த ஆண்டு 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்புத் தேர்வில் மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம், இந்த ஆண்டு 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள 355 பள்ளிகளைச் சேர்ந்த 26,920 மாணவ, மாணவியர் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர். இதில், 26,373 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.97. மாணவர்களைப் பொருத்தவரை 97.42 சதவீதமும், மாணவியர் 98.53 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பெற்று வந்துள்ளது. கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 98.88 சதவீதமும், 2014-15 ஆம் ஆண்டில் 98.4 சதவீதமும், 2015-16 ஆம் ஆண்டில் 98.48 சதவீதமும் பெற்றது. இந்த ஆண்டு 97.97 சதவீதம் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது.
 அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை 2014-15 ஆம் ஆண்டில் 78 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. கடந்த ஆண்டு 89 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையிலும் சரிவு ஏற்பட்டு, 83 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 97.11 சதவீதமாக உள்ளது.
 மாவட்டத்தில் 224 பள்ளிகள் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க இப்பள்ளிகள் முக்கியக் காரணமாக அமைந்தன. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 204 பள்ளிகளாக குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com