சூரம்பட்டி டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, சூரம்பட்டி, ஜெகநாதபுரம் காலனியில் உள்ள டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு, சூரம்பட்டி, ஜெகநாதபுரம் காலனியில் உள்ள டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 சூரம்பட்டி, நால்ரோட்டில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகள் சில தினங்களுக்கு முன்பு மூடப்பட்டதால், அருகில் உள்ள ஜெகநாதபுரம் காலனி டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிட்டது.
 இதனால், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மதுக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
 இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார், ஈரோடு நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினர். அதில், மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டதும், உடனடியாக கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com