ஈரோடு
சாலை விபத்தில் ஓட்டுநர் சாவு
சித்தோடு அருகே லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் டெம்போ ஓட்டுநர் உயிரிழந்தார்.
சித்தோடு அருகே லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் டெம்போ ஓட்டுநர் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் முத்துசாமி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் வீரராகவப் பெருமாள் (49). இவர், ஒரு டெம்போவில் கோழி பாரம் ஏற்றிக் கொண்டு கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். சித்தோட்டை அடுத்துள்ள நசியனூர் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியுள்ளது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த டெம்போ, நிலைதடுமாறி லாரியின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த வீரராகவப் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, சித்தோடு போலீஸார் விசாரிக்கின்றனர்.