பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, பெருந்துறை வட்டாட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அதிகாரி முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
முகாமில், புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர், முகவரி மாற்றம், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை கோரி பொதுமக்களிடமிருந்து 15 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில், பெருந்துறை மண்டல வட்டாட்சியர் ரவிசந்திரன், அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர்.