பெரியார் விருது பெற நவம்பர் 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்காகப் பாடுபடுவோருக்கு வழங்கப்படும் பெரியார் விருது பெற தகுதி உடையவர்கள் நவம்பர் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்காகப் பாடுபடுவோருக்கு வழங்கப்படும் பெரியார் விருது பெற தகுதி உடையவர்கள் நவம்பர் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
 ஒவ்வோர் ஆண்டும் சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதைப் பெறுவோருக்கு ரூ. 1 லட்சம்  பொற்கிழி, ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. 2017-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரைத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின்
சமூக , பொருளாதார, கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றுடன் அவர்களது பெயர், சுயவிவரம், முழு முகவரியுடன் நவம்பர் 13-ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com