பவானி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பவானியை அடுத்த ஜம்பை, பாரதி வீதியைச் சேர்ந்தவர் நடராஜ் மகன் நாகராஜ் (31). இவர், கடந்த சில நாள்களாக மர்மக் காய்ச்சல் பாதிப்பால் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குணமாகாததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நாகராஜ் புதன்கிழமை உயிரிழந்தார்.
கடந்த வாரம் ஜம்பையை அடுத்த நல்லிபாளையம் பகுதியில் 6 வயதான சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு இளைஞர் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.