தாளவாடி அருகே யானை தாக்கியதில் பூசாரி உயிரிழந்தார்.
தாளவாடி புலிகள் காப்பகம், அருள்வாடியைச் சேர்ந்தவர் விவசாயி நஞ்சுண்டய்யா (65). கோயில் பூசாரி. இவரது தோட்டத்தில் ராகி சாகுபடி செய்துள்ளார். வனத்தில் இருந்து வரும் யானைகள், காட்டுப் பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் நஞ்சுண்டய்யா புதன்கிழமை காவலுக்குச் சென்றுள்ளார். அப்போது, தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த யானைகளை அவர் மேளம் அடித்து விரடியுள்ளார். அதில், ஒரு யானை அவரைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலின்பேரில், நஞ்சுண்டய்யாவின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.