ஈரோட்டில் வட்டச் சாலை திட்டத்தை விரைந்து முடிக்க தமாகா கோரிக்கை

ஈரோட்டில் வட்டச் சாலை அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோட்டில் வட்டச் சாலை அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸின் நிர்வாகிகள் ஆலோசனைக்  கூட்டத்துக்கு, ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில மேலிட பொறுப்பாளர் குனியமுத்தூர் ஆறுமுகம்,  மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் விடியல்சேகர்,  மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஈரோடு - கொடுமுடி சாலை - திண்டல் வரை உள்ள ஈரோடு வட்டச் சாலை திட்டத்தின் பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.  இதனால், போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்தும் நடைபெறுகிறது. இத்திட்டத்தை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமாகா சார்பில், திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா மாநாட்டுக்கு, ஈரோடு மத்திய மாவட்டத்திலிருந்து நிர்வாகிகள் ஆயிரம் பேர் கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர்,  மாநில விவசாய பிரிவுத் தலைவர் புலியூர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com