ஈரோடு
கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் சாவு
சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.
சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் ராஜவீதியைச் சேர்ந்தவர் எஸ்.சுரேஷ் (21). இவரது நண்பர்கள் சதீஷ், சுதாகர் ஆகியோருடன் சுரேஷ் அங்குள்ள அரசு வேளாண்மைக் கிணற்றுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.
அப்போது, கிணற்றுப் பகுதியில் வலையை விரித்தபோது சுரேஷ் கால் தவறி கிணற்றில் விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.