பேராசிரியர்கள் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியின் மின், மின்னணுவியல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியின் மின், மின்னணுவியல் துறையும் இணைந்து நடத்திய பேராசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாம் நவம்பர் 21 முதல் 27-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறவுள்ளது. மின் சக்தியின் செயல்பாடு, கட்டுப்பாட்டு முறைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவுக்கு, கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்து,  பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தார். துறைத் தலைவர் டி.சபாபதி வரவேற்றார்.
முதல்வர் பி.செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மதுரை, தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் மின், மின்னணுவியல் துறை உதவிப் பேராசிரியர் சி.கே.பாபுலால் பங்கேற்றுப் பேசினார். கல்லூரி உதவிப் பேராசிரியர் சரண்யா நிவாஷினி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com