விவசாய நிலத்திலிருந்து மணல் கடத்தல்: பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல்

கொடுமுடி அருகே நாமநாயக்கன்பாளையம் காவிரிக் கரையோரம் உள்ள விவசாய நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட

கொடுமுடி அருகே நாமநாயக்கன்பாளையம் காவிரிக் கரையோரம் உள்ள விவசாய நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் இயந்திரத்தை கொடுமுடி காவல் துறையினர் திங்கள்கிழமை கைப்பற்றினர்.
கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார் பாறை கிராமம், நாமநாயக்கன்பாளைம் பகுதியில் காவிரி கரையோரத்தை ஒட்டி உள்ள விவாசய நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கொடுமுடி காவல் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற  காவல் துறையினர்  மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், லாரியை கைப்பற்றி கொடுமுடி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com