தூய்மை இந்தியா இயக்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தை வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகள் புதன்கிழமை சுத்தம் செய்தனர்.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தொடக்கிவைத்தார். பொருளாதாரத் துறைப் பேராசிரியர் கே.கே.சாரதா, நிர்ம செயலாண்மைத் துறைப் பேராசிரியர் அ.சபீனா ஆகியோர் தலைமையில் இப்பணியை மாணவிகள் மேற்கொண்டனர்.
இதில், கல்லூரி மாணவிகள் பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்த புற்கள், பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.