கோபி அருகே இருசக்கர வாகனம், வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
தேனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (40). இவரது நண்பர் பரத் (21). இருவரும் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் - கோபி சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் கோபி அருகே, கொளப்பலூர் பகுதியில் வந்தபோது எதிரே வந்த வேன் எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில், சரவணகுமார் உயர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சிறுவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.