நீட் தேர்வை ஆதரித்து பாஜக சார்பில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள படைவீரர்கள் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச் செயலர் குரு.குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் சிவகாமி பரமசிவம், சேலம் கோட்ட இணைப் பொறுப்பாளர் அண்ணாதுரை, மாநில வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் என்.பி.பழனிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், ஏழை, எளிய மக்கள் மருத்துவராக நீட் தேர்வை நடத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்டச் செயலர் பி.கிருஷ்ணகுமார், சூரம்பட்டி மண்டலத் தலைவர் சின்னதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.