ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

ஈரோடு அருகே வீரப்பன்சத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு அருகே வீரப்பன்சத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் நாராயணவலசு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34), ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சுமதி (32). இவர்களுக்குத் திருமணம் ஆகி சுமார் 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுமதி (29) என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டு 2 மனைவிகளுடன் பிரகாஷ் வசித்து வந்தார்.
இந்நிலையில், பிரகாஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் 2-ஆவது மனைவி அம்முவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பிரகாஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து, வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
மொடக்குறிச்சி, செப். 16: மொடக்குறிச்சியை அடுத்த மன்னதாம்பாளையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
மொடக்குறிச்சியை அடுத்த மன்னதாம்பாளையத்தில் உள்ள சமுதாயக் கூடம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த மூன்று நாள்களாக சுற்றித் திரிந்துள்ளார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்கு பழக்கடை வைத்து நடத்தி வரும் சுரேஷ் (30) என்பவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர், உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சனிக்கிழமை அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த முதியவர் கருப்பு நிறம், நரை முடியுடன் காணப்பட்டார் வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். இதுகுறித்து மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com