அரசு சார்பில் பெரியாருக்கு மரியாதை

ஈரோடு மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் பெரியாருக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் பெரியாருக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியாரின் 139-ஆவது பிறந்த நாளையொட்டி ஈரோட்டில் உள்ள பெரியார் நினைவகத்தில் அவரது உருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில், தென்னரசு எம்.எல்.ஏ., பகுதி செயலர்கள் கே.சி.பழனிசாமி, இரா.மனோகரன்,  ஏ.ஆர்.ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

திமுக சார்பில்...
பெரியாரின் 139-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலர் சு.முத்துசாமி தலைமையிலான திமுகவினர் ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள பெரியார் நினைவகத்துக்குச் சென்றனர். அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் முழுஉருவச் சிலைக்கு முத்துசாமி, திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமார், மாநகர செயலர் சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல, திராவிடர் கழகம் சார்பில் மண்டல அமைப்புச் செயலர் சண்முகம் தலைமையிலான நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோபியில்...
பெரியாரின் 139-ஆவது பிறந்தநாளையொட்டி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோபியில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு திமுக மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் கோ.ப.வெங்கிடு, முன்னாள் திமுக மக்களவை உறுப்பினர் வி.பி.சண்முகசுந்தரம்,  திமுக நகரச் செயலாளர் என்.ஆர்.நாகராஜ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலத்தில்...
பெரியார் பிறந்தநாளையொட்டி, தலித் விடுதலைக் கட்சி சார்பில் வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலித் விடுதலைக் கட்சி, ஆதித்தமிழர் விடுதலைக் கட்சி ஆகியவை சார்பில் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற இப்பேரணி, எஸ்ஆர்டி கார்னரில் இருந்து தொடங்கியது. பேரணிக்கு, தலித் விடுதலைக் கட்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பெ.பொன்னுசாமி தலைமை வகித்தார். சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில் பெரியார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு கடைவீதி வழியாக வாகனங்கள் புதுவடவள்ளி, சமத்துவபுரத்துக்கு பேரணியாகச் சென்றன. அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
 இதில், தலித் விடுதலைக் கட்சி மாநிலச் செயலாளர் எம்.பி.செங்கோட்டையன், ஆதித் தமிழர் விடுதலைக் கட்சித் தலைவர் கோவை ரவிகுமார் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com