கொடுமுடி அருகே பாசூர், சோழசிராமணி ஆற்றுப் பாலத்தைக் கடந்து செல்லும் வழியில் சாலையோரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் லாரி விபத்துக்குள்ளானது.
கரூரில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு காவிரி தடுப்பணை வழியாக வியாழக்கிழமை வந்த லாரி பாசூர் - சோழசிராமணி பாலத்தின் முன்பு சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் தளம் சரிந்து விழுந்ததில், லாரி நிலைதடுமாறி காவிரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரி ஓட்டுநர் தண்டபாணி பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் தண்டபாணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து, மலையம்பாலையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.