ஈரோடு அஞ்சல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது அஞ்சலகக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க முன்வர வேண்டும் என்று ஈரோடு முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்கள் ஆதார் எண், செல்லிடப்பேசி எண்ணை இணைப்பதன் மூலம் அரசு வழங்கும் திட்டங்கள், நன்மைகளை இக்கணக்கின் மூலம் பெற்றிட ஏதுவாகும். தங்களால் நேரில் வர முடியாதவர்கள் வெள்ளைத்தாளில் கணக்கு வைத்திருப்பவர் பெயர், அஞ்சலக சேமிப்புக் கணக்கு எண், ஆதார் எண், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அஞ்சல் பெட்டிகளில் போட்டுவிடலாம்.
அவ்வாறு போடப்படும் தகவல் அறிக்கையைக் கொண்டு சேமிப்புக் கணக்கில் அந்த விவரங்கள் இணைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.